Skip to main content

Posts

தேங்காய் பராத்தா - Coconut Paratha

தேங்காய் பராத்தா மிக எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய எளிமையான உணவாகும். எந்த வயதினருக்கும் ஏற்றது.   தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 2 கப் தேங்காய்காய் துருவல் - 1 கப் பச்சை மிளகாய் - 1, பொடியாக நறுக்கிக் கொள்ளவும் புதினா - 4 இலைகள் கொத்தமல்லி இலை - சிறிதளவு நெய் - 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு உப்பு தேவையான அளவு செய்முறை ஒரு அகலமான பவுலில் கோதுமை மாவு, நெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவு கைகளில் ஒட்டாத பதம் வரும் வரை பிசைந்து கொள்ளவும். மாவின் மேலே சிறிது எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் புதினா சேர்த்து லேசாக வதக்கவும். பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி ஆறவிடவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின் சிறிய சப்பாத்தியாக போட்டு நடுவில் 1 டேபிள் ஸ்பூன் வதக்கிய தேங்

கார வடை - பட்டாணி பருப்பு போண்டா - Kara Vadai

எந்த ஒரு விசேஷம் அல்லது வீட்டில் நடக்கும் பார்ட்டிக்கு நாம் பெரும்பாலும் உளுந்த வடை அல்லது பஜ்ஜி செய்வதுண்டு. ஒரு மாறுதலுக்கு இந்த சுவையான பட்டாணி பருப்பு  கார போண்டா செய்து பாருங்கள். பட்டாணி பருப்பு கார போண்டா வெளியே முறுகலாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும். இந்த போண்டா நேரமானாலும் அதன் சுவை மாறாது.  தேவையான பொருட்கள் 1.25 கப் பட்டாணி பருப்பு 1 கப் உளுத்தம்பருப்பு 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு 2 வெங்காயம், பொடியாக நறுக்கியது 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது சிறிதளவு கொத்தமல்லி இலை சிறிதளவு புதினா சிறிதளவு கறிவேப்பிலை உப்பு தேவையான அளவு கடலை எண்ணெய் செய்முறை ஒரு அகலமான பாத்திரத்தில் பட்டாணி பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பை அளந்து எடுத்துக் கொள்ளவும். பின் 2 கப் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரில் 3 முறை நன்கு கழுவி விட்டு தண்ணீரை முழுவதும் வடித்து வைக்கவும். கிரைண்டரை நன்றாக தண்ணீரில் கழுவி விட்டு ஊறவைத்த பருப்பை சேர்த்து அரைக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பொங்க பொங்க அரைத்துக் கொள்ளவும். மாவு வெண்ணெய் போல் நன்கு மிருதுவாக இருக்கும

கருப்பு உளுந்து சின்ன வெங்காயம் சட்னி - Small Onion Black Urid dal Chutney

கருப்பு உளுந்து, சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் மிளகாய் வற்றலை வறுத்து அரைக்கவும். இதில் வறுத்த கருப்பு உளுந்தை கடைசியாக சேர்த்து அரைக்கவும். இந்த சட்னி இட்லி, தோசை, கேப்பை தோசைக்கு நன்றாக இருக்கும்.  தேவையான பொருட்கள் 15 சின்ன வெங்காயம் 5 பூண்டு பற்கள் 1.5 டேபிள் ஸ்பூன் கருப்பு உளுந்து 8 காய்ந்த மிளகாய் சிறிது புளி 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் சிறிது கல் உப்பு செய்முறை சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்கள் தோலை உரித்து கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கருப்பு உளுந்தம் பருப்பை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின் அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும். அடுப்பை அனைக்கும் போது புளியை சேர்க்கவும். ஒரு சிறிய சட்னி ஜாரில் கல் உப்பு மற்றும் வறுத்த காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். (புளியை ஊறவைத்து ச

வெந்தய மிளகாய் - Green Chilly Pickle

பச்சை மிளகாயிலுள்ள கேப்சிக்கோ என்ற வேதிப்பொருள் பல்வேறு மருத்துவ குணங்களுடைய வெந்தயத்தோடு சேர்ந்து நாவிற்கு சுவையான சைட் டிஷை அளிப்பதோடு நமது உடலுக்குத் தேவையான பல நன்மைகளைத் தருகிறது. மேலும் எண்ணெயில் பச்சைமிளகாயை வதக்குவதால் காரம் குறைவாக இருக்கும்.   தேவையான பொருட்கள் பச்சை மிளகாய் - 25 வெந்தயம் - 2 டீஸ்பூன் கட்டிப் பெருங்காயம் ‌‌ - சிறிய துண்டு நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை பச்சை மிளகாயை நன்கு கழுவிக் கொள்ளவும். பின் ஒரு வெள்ளை துணியால் ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளவும். பின் நடுவில் கீறிக் கொள்ளவும். ஒரு வாணலியில் வெந்தயத்தை போட்டு வாசம் வரும் வரை வறுத்துக்  கொள்ளவும். பின் ஒரு தட்டில் மாற்றவும். அதே வாணலியில் ஒரு துளி எண்ணெய் விட்டு கட்டி பெருங்காயத்தை போட்டு பொரிந்ததும் அடுப்பை அணைத்து விடவும். பின் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் வறுத்த வெந்தயம், வறுத்த காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும். இப்போது ஒரு சிறிய ஸ்பூன் வைத்து சிறிதளவு பொடித்த பொடியை ஒவ்வொரு பச்சை மிளகாயின் நடுவில் வைத்து 2 பக்களிலும் தடவவும்

தக்காளி வெங்காய சப்ஜி - Tomato Onion Sabji

சப்பாத்திக்கு பத்தே நிமிடத்தில் சுவையான சப்ஜி. இந்த சப்ஜியில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து செய்யப்படும். சிறிதளவு தக்காளியை  அரைத்து சேர்த்தால் தொக்கு போல் கெட்டியாக இருக்கும் .  தேவையான பொருட்கள் 2 வெங்காயம் 4 நன்கு பழுத்த தக்காளி 2 பச்சை மிளகாய் 1/2 டீஸ்பூன் கடுகு 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு சிறிது கறிவேப்பிலை 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன் தனியா தூள் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு செய்முறை 1. வெங்காயம் மற்றும் 2  தக்காளியை மெலிதாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். 2 தக்காளியை அரைத்துக் கொள்ளவும். 2. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பின் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். அவை வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 3. பின் நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தக்காளி லேசாக நிறம் மாறிய பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். 4. அவை வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் மற்றும

உளுந்தம் பருப்பு சோறு - Black Urid Dal Rice (Ulundham Paruppu Sadham)

உளுந்தம்பருப்பு சோறு - கருப்பு உளுந்து, அரிசி, தேங்காய் துருவல் மற்றும் வெந்தயம் சேர்த்து ஒரு ஆரோக்கியமான சாதம். இந்த சாதத்தை எள்ளு துவையல் போட்டு பிசைந்து அவியல் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.  தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1கப் கருப்பு உளுந்தம் பருப்பு - 1/4 கப் மற்றும் ஒரு கை வெந்தயம் - 1 டீஸ்பூன் பூண்டு பற்கள் - 10 தேங்காய்த்துருவல் - 1/2 கப் தண்ணீர் - 3 கப் நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி அதில் வெந்தயத்தை சேர்த்து வறுக்கவும். வெந்தயம் லேசாக வெடிக்க ஆரம்பித்ததும் கருப்பு உளுந்தம் பருப்பை சேர்த்து நன்கு  வாசனை வரும் வரை வறுக்கவும்.  ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசியோடு வறுத்த பருப்பையும் சேர்த்து நன்கு கழுவி விட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். ஒரு பிரஷர் குக்கரில் ஊறவைத்த அரிசி, மேலும் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். பின் அதில் தேவையான அளவு உப்பு, தேங்காய் துருவல் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். குக்கரை மூடி வைத்து 3 விசில் வரும் வரை

காரக்குழம்பு - Karakuzhambu

இந்த காரக்குழம்பை ஒரு நாள் மதிய உணவாக ஹோட்டலில் சாப்பிடும் போது சுவைத்தேன். மிகவும் அருமையாக இருந்தது. பின் வீட்டில் வந்து செய்து பார்த்தேன்.  இந்த காரக்குழம்புக்கு மசாலா பொருட்கள் வறுக்கும் போது பதமாக வாசனை வரும் வரை வறுக்கவும். அதேபோல் குறிப்பிட்டள்ள அளவுக்கு மேல் பொருட்கள் சேர்க்க வேண்டாம். ஏனென்றால் குழம்பு கெட்டியாகிவிடும். இந்த குழம்பு தண்ணியாகவும் இருக்கக்கூடாது கெட்டியாகவும் இருக்கக்கூடாது. இதில் சுண்டைக்காய் வற்றலுக்கு பதிலாக கத்திரிக்காய் அல்லது மணத்தக்காளி வற்றல் வைத்து செய்யலாம்.  தேவையான பொருட்கள் 10 சின்ன வெங்காயம் 7 பூண்டு பற்கள் 1 தக்காளி 2 டேபிள் ஸ்பூன் சுண்டைக்காய் வற்றல் 2 காய்ந்த மிளகாய் 2 டீஸ்பூன் சாம்பார் பொடி 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் சிறிது கறிவேப்பிலை 1/2 டீஸ்பூன் கடுகு 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு 1/4 டீஸ்பூன் வெந்தயம் 7 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் உப்பு தேவையான அளவு அரைக்க 1 டேபிள் கடலைப்பருப்பு 1 டேபிள் ஸ்பூன் தனியா 1 டீஸ்பூன் சீரகம் 1 டீஸ்பூன் சோம்பு 1/4 கப் தேங்காய் துருவல் 6 சின்ன வெங்காயம் 1 தக்காளி 6 காய்ந்த மிளகா