Skip to main content

Posts

Showing posts with the label மதிய உணவு வகைகள்

காரக்குழம்பு - Karakuzhambu

இந்த காரக்குழம்பை ஒரு நாள் மதிய உணவாக ஹோட்டலில் சாப்பிடும் போது சுவைத்தேன். மிகவும் அருமையாக இருந்தது. பின் வீட்டில் வந்து செய்து பார்த்தேன்.  இந்த காரக்குழம்புக்கு மசாலா பொருட்கள் வறுக்கும் போது பதமாக வாசனை வரும் வரை வறுக்கவும். அதேபோல் குறிப்பிட்டள்ள அளவுக்கு மேல் பொருட்கள் சேர்க்க வேண்டாம். ஏனென்றால் குழம்பு கெட்டியாகிவிடும். இந்த குழம்பு தண்ணியாகவும் இருக்கக்கூடாது கெட்டியாகவும் இருக்கக்கூடாது. இதில் சுண்டைக்காய் வற்றலுக்கு பதிலாக கத்திரிக்காய் அல்லது மணத்தக்காளி வற்றல் வைத்து செய்யலாம்.  தேவையான பொருட்கள் 10 சின்ன வெங்காயம் 7 பூண்டு பற்கள் 1 தக்காளி 2 டேபிள் ஸ்பூன் சுண்டைக்காய் வற்றல் 2 காய்ந்த மிளகாய் 2 டீஸ்பூன் சாம்பார் பொடி 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் சிறிது கறிவேப்பிலை 1/2 டீஸ்பூன் கடுகு 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு 1/4 டீஸ்பூன் வெந்தயம் 7 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் உப்பு தேவையான அளவு அரைக்க 1 டேபிள் கடலைப்பருப்பு 1 டேபிள் ஸ்பூன் தனியா 1 டீஸ்பூன் சீரகம் 1 டீஸ்பூன் சோம்பு 1/4 கப் தேங்காய் துருவல் 6 சின்ன வெங்காயம் 1 தக்காளி 6 காய்...

வாழைக்காய் புட்டு (பொடிமாஸ்) - Plantain Puttu

வாழைக்காய் புட்டு - பத்தே நிமிடத்தில் சுவையான சைட் டிஷ். வேகவைத்த வாழைக்காயை பொடியாக துருவி தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து இறக்கினால் சுவையான வாழைக்காய் புட்டு தயார். சாம்பார், ரசம் மற்றும் எந்த வகையான குழம்புகளுக்கும் சுவையாக இருக்கும். தேவையானவை பொருட்கள் வாழைக்காய் - 2 வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 தேங்காய் துருவல் - 1/4 கப் கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை வாழைக்காயை நன்கு கழுவி ஓரங்களை நறுக்கிக் கொள்ளவும். பின் பாதியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நறுக்கிய வாழைக்காயை சேர்த்து மூடி வைத்து வேக விடவும். வாழைக்காயின் தோல் கருப்பாக மாறும் போது நடுவில் ஒரு கத்தியால் குத்திப் பார்த்தால் பூவாக இருக்கும். பின் தண்ணீரை முழுவதும் வடித்து ஒரு தட்டில் வைத்து ஆறவைத்து தோலை உரித்து கொள்ளவும். பின் கேரட் துருவியில் பொடியாக துருவிக் கொள்ளவும். வாழைக்காய் துருவலோடு தேவையான அளவு ...

வெஜிடபிள் புலவ் - Vegetable Pulav

வெஜிடபிள் புலவ் - குறைவான பொருட்கள் வைத்து சுலபமான வெஜிடபிள் புலவ். வீட்டில் நடத்தும் சிறிய பிறந்தநாள் பார்ட்டி அல்லது கெட் டு கெதர்(get together) போன்ற விசேஷங்களுக்கு இந்த புலவ் நன்றாக இருக்கும். இதற்கு எந்த வகையான மசாலா அல்லது குருமா வைத்து பரிமாறவும். தேவையானவை பொருட்கள் பாஸ்மதி அரிசி - 1/2 கப் தண்ணீர் - 1 கப் வெங்காயம் - 1, மெலிதாக நீளமாக நறுக்கியது பச்சை மிளகாய் - 2 கீறிக் கொள்ளவும் கேரட் - 1 நீளமாக நறுக்கவும் பீன்ஸ் - 4 நீளமாக நறுக்கவும் பச்சை பட்டாணி - 1/4 கப் பிரிஞ்சி இலை - 1 பட்டை - சிறிய துண்டு சீரகம் - 1/4 டீஸ்பூன் ஏலக்காய் - 2 கிராம்பு - 2 முந்திரிப்பருப்பு - 7 கொத்தமல்லி இலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு நெய் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி தண்ணீரை முழுவதும் வடித்து கொள்ளவும். முந்திரிபருப்பை சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். ஒரு அகலமான கனமான கடாயில் நெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து நன்கு வாசனை வந்ததும் வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் ச...

திருநெல்வேலி கூட்டாஞ்சோறு - Tirunelveli Kootanchoru

கூட்டாஞ்சோறு - திருநெல்வேலியின் மிகவும் பிரபலமான மதிய உணவு. காய்கறிகள், பருப்பு, அரிசி மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சோறு. இதற்கு நாட்டு வாழைக்காய், வெள்ளை கத்திரிக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், மாங்காய் மற்றும் முருங்கைக்கீரை முக்கிய காய்கறிகளாகும். இந்த சோறு செய்து ஆறிய பின் இதில் இருக்கும் புளிப்பு மற்றும் காரம் சமமாக சேர்ந்து சுவையாக இருக்கும். இதற்கு கூழ் வத்தல் அல்லது அப்பளம் வைத்து பரிமாறவும் . தேவையான பொருட்கள் 2 கப் புழுங்கல் அரிசி 1/2 கப் துவரம்பருப்பு பெரிய எலுமிச்சை அளவு புளி 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 10 சின்ன வெங்காயம் 3 பச்சை மிளகாய் உப்பு தேவையான அளவு காய்கறிகள் 2 கேரட் 10 பீன்ஸ் 10 கொத்தவரங்காய் 2 முருங்கைக்காய் 7 கத்தரிக்காய் 1 வாழைக்காய் 1 உருளைக்கிழங்கு சிறிதளவு மாங்காய் துண்டுகள் 1 கப் முருங்கைக்கீரை இலைகள் அரைக்க 1 கப் தேங்காய் துருவல் 20 காய்ந்த மிளகாய் 15 சின்ன வெங்காயம் 10 பூண்டு பற்கள் 1 டேபிள்ஸ்பூன் சீரகம் தாளிக்க 1/2 கடுகு 1/2 டீஸ்பூன் உள...

அவியல் - Aviyal

வாழைக்காய், கத்திரிக்காய், கேரட், பீன்ஸ் போன்ற பல காய்கறிகளை சேர்த்து சுவையான ஆரோக்கியமான அவியல். திருநெல்வேலியில் வெள்ளை கத்திரிக்காய் சேர்த்து செய்வது வழக்கம். சாம்பார், புளிக்குழம்பு மற்றும் உளுந்தம் பருப்பு சாதத்திற்கு அருமையாக இருக்கும்.  தேவையானவை பொருட்கள் வாழைக்காய் - 1 கேரட் - 2 பீன்ஸ் - 9 கத்திரிக்காய் - 7 உருளைக்கிழங்கு - 1 முருங்கைக்காய் - 7 துண்டுகள் மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் புளித்த தயிர் - 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - 10 உப்பு - தேவையான அளவு அரைக்க தேங்காய் துருவல் - 5 டேபிள்ஸ்பூன் சின்ன வெங்காயம் - 4 பூண்டு பற்கள் - 2 பச்சை மிளகாய் - 3 சீரகம் - 1 டீஸ்பூன் தாளிக்க கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் செய்முறை கேரட்டை தோல் சீவி நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பீன்ஸையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் சீவி நீளமாக நறுக்கிக் கொள்ளவும். வாழைக்காய்யையும் தோல் சீவி நீளமாக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காய் காம்பை நீக்கி பாதியாக நறுக்கி மீண்டும...

திருநெல்வேலி இடி சாம்பார் - Tirunelveli Idi Sambar

தேவையான பொருட்கள் 1/4 கப் துவரம்பருப்பு சிறிய எலுமிச்சை அளவு புளி 15 சின்ன வெங்காயம் 2 பச்சை மிளகாய் 1 அல்லது 2 முருங்கைக்காய் 4 வெண்டைக்காய் 2 கத்திரிக்காய் 5 சிறிய துண்டு மாங்காய் 1/4 டீஸ்பூன் வெந்தயம் 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் சிறிதளவு கறிவேப்பிலை சிறிதளவு கொத்தமல்லி இலை 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு இடி சாம்பார் பொடி செய்ய 7 காய்ந்த மிளகாய் 1 டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு 1/2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு 1.5 டேபிள் ஸ்பூன் தனியா 1 டீஸ்பூன் சீரகம் 1/2 டீஸ்பூன் அரிசி 1/2 டீஸ்பூன் மிளகு 1 டீஸ்பூன் கருப்பு உளுந்து சிறிதளவு எண்ணெய் அரைக்க 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் 4 சின்ன வெங்காயம் 3 பூண்டு பற்கள் 1/4 டீஸ்பூன் சீரகம் செய்முறை துவரம்பருப்பை கழுவி விட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். புளியை இளம் சூடான நீரில் ஊறவைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பு சேர்த்து வறுக்கவும். அவை நிறம் மாற ஆரம்பிக்கும் போது தனியா, சீரகம், அ...