பச்சை மிளகாயிலுள்ள கேப்சிக்கோ என்ற வேதிப்பொருள் பல்வேறு மருத்துவ குணங்களுடைய வெந்தயத்தோடு சேர்ந்து நாவிற்கு சுவையான சைட் டிஷை அளிப்பதோடு நமது உடலுக்குத் தேவையான பல நன்மைகளைத் தருகிறது. மேலும் எண்ணெயில் பச்சைமிளகாயை வதக்குவதால் காரம் குறைவாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
- பச்சை மிளகாய் - 25
- வெந்தயம் - 2 டீஸ்பூன்
- கட்டிப் பெருங்காயம் - சிறிய துண்டு
- நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
- பச்சை மிளகாயை நன்கு கழுவிக் கொள்ளவும். பின் ஒரு வெள்ளை துணியால் ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளவும்.
- பின் நடுவில் கீறிக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் வெந்தயத்தை போட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின் ஒரு தட்டில் மாற்றவும். அதே வாணலியில் ஒரு துளி எண்ணெய் விட்டு கட்டி பெருங்காயத்தை போட்டு பொரிந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- பின் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் வறுத்த வெந்தயம், வறுத்த காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.
- இப்போது ஒரு சிறிய ஸ்பூன் வைத்து சிறிதளவு பொடித்த பொடியை ஒவ்வொரு பச்சை மிளகாயின் நடுவில் வைத்து 2 பக்களிலும் தடவவும்.
- ஒரு இரும்பு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கலந்து வைத்துள்ள பச்சை மிளகாய்களை சேர்த்து சிறு தீயில் வைத்து லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும். பின் பீங்கான் பவுலில் மாற்றிக் கொள்ளவும்.
குறிப்பு
இட்லி, தோசைக்கு பரிமாறும் போது வெந்தய மிளகாயின் மேல் சிறிது நல்லெண்ணெய் விட்டு கலந்துக் கொள்ளவும்.
Comments
Post a Comment