எந்த ஒரு விசேஷம் அல்லது வீட்டில் நடக்கும் பார்ட்டிக்கு நாம் பெரும்பாலும் உளுந்த வடை அல்லது பஜ்ஜி செய்வதுண்டு. ஒரு மாறுதலுக்கு இந்த சுவையான பட்டாணி பருப்பு கார போண்டா
செய்து பாருங்கள். பட்டாணி பருப்பு கார போண்டா வெளியே முறுகலாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும். இந்த போண்டா நேரமானாலும் அதன் சுவை மாறாது.
தேவையான பொருட்கள்
செய்து பாருங்கள். பட்டாணி பருப்பு கார போண்டா வெளியே முறுகலாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும். இந்த போண்டா நேரமானாலும் அதன் சுவை மாறாது.
தேவையான பொருட்கள்
- 1.25 கப் பட்டாணி பருப்பு
- 1 கப் உளுத்தம்பருப்பு
- 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
- 2 வெங்காயம், பொடியாக நறுக்கியது
- 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
- சிறிதளவு கொத்தமல்லி இலை
- சிறிதளவு புதினா
- சிறிதளவு கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- கடலை எண்ணெய்
செய்முறை
- ஒரு அகலமான பாத்திரத்தில் பட்டாணி பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பை அளந்து எடுத்துக் கொள்ளவும். பின் 2 கப் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
- பின் தண்ணீரில் 3 முறை நன்கு கழுவி விட்டு தண்ணீரை முழுவதும் வடித்து வைக்கவும்.
- கிரைண்டரை நன்றாக தண்ணீரில் கழுவி விட்டு ஊறவைத்த பருப்பை சேர்த்து அரைக்கவும்.
- சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பொங்க பொங்க அரைத்துக் கொள்ளவும். மாவு வெண்ணெய் போல் நன்கு மிருதுவாக இருக்கும்.
- மாவு நன்கு அரைந்ததும் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
- பின் அதில் அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, புதினா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- மாவில் தண்ணீர் அதிகமாக இருந்தால் சிறிது அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- வாணலியில் கடலை எண்ணெய் விட்டு சூடானதும் பிசைந்த மாவை ஈரமான கை வைத்து சிறு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சூடாக பரிமாறவும்.
Comments
Post a Comment