Skip to main content

கருப்பு உளுந்து சின்ன வெங்காயம் சட்னி - Small Onion Black Urid dal Chutney

கருப்பு உளுந்து, சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் மிளகாய் வற்றலை வறுத்து அரைக்கவும். இதில் வறுத்த கருப்பு உளுந்தை கடைசியாக சேர்த்து அரைக்கவும். இந்த சட்னி இட்லி, தோசை, கேப்பை தோசைக்கு நன்றாக இருக்கும். 



தேவையான பொருட்கள்
  • 15 சின்ன வெங்காயம்
  • 5 பூண்டு பற்கள்
  • 1.5 டேபிள் ஸ்பூன் கருப்பு உளுந்து
  • 8 காய்ந்த மிளகாய்
  • சிறிது புளி
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 2 டீஸ்பூன் நல்லெண்ணெய்
  • சிறிது கல் உப்பு
செய்முறை
  1. சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்கள் தோலை உரித்து கொள்ளவும்.
  2. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கருப்பு உளுந்தம் பருப்பை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
  3. பின் அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
  4. பின் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும். அடுப்பை அனைக்கும் போது புளியை சேர்க்கவும்.
  5. ஒரு சிறிய சட்னி ஜாரில் கல் உப்பு மற்றும் வறுத்த காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். (புளியை ஊறவைத்து சேர்த்தால் இப்போது சேர்த்து கொள்ளவும்.)
  6. பின் வதக்கிய சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் புளி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
  7. கடைசியாக வறுத்து வைத்துள்ள கருப்பு உளுந்தை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து லேசாக அரைக்கவும். பின் பரிமாறும் கிண்ணத்தில் மாற்றி சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கலந்து விடவும்.
படிப்படியாக படத்துடன் கருப்பு உளுந்து சின்ன வெங்காயம் துவையல் விளக்கம் காண கீழே இருக்கும் லிங்க் மேலே கிளிக் செய்யவும்.
Small onion Chutney with Black urid dal @virundhombal.com

Comments

Popular posts from this blog

திருநெல்வேலி கூட்டாஞ்சோறு - Tirunelveli Kootanchoru

கூட்டாஞ்சோறு - திருநெல்வேலியின் மிகவும் பிரபலமான மதிய உணவு. காய்கறிகள், பருப்பு, அரிசி மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சோறு. இதற்கு நாட்டு வாழைக்காய், வெள்ளை கத்திரிக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், மாங்காய் மற்றும் முருங்கைக்கீரை முக்கிய காய்கறிகளாகும். இந்த சோறு செய்து ஆறிய பின் இதில் இருக்கும் புளிப்பு மற்றும் காரம் சமமாக சேர்ந்து சுவையாக இருக்கும். இதற்கு கூழ் வத்தல் அல்லது அப்பளம் வைத்து பரிமாறவும் . தேவையான பொருட்கள் 2 கப் புழுங்கல் அரிசி 1/2 கப் துவரம்பருப்பு பெரிய எலுமிச்சை அளவு புளி 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 10 சின்ன வெங்காயம் 3 பச்சை மிளகாய் உப்பு தேவையான அளவு காய்கறிகள் 2 கேரட் 10 பீன்ஸ் 10 கொத்தவரங்காய் 2 முருங்கைக்காய் 7 கத்தரிக்காய் 1 வாழைக்காய் 1 உருளைக்கிழங்கு சிறிதளவு மாங்காய் துண்டுகள் 1 கப் முருங்கைக்கீரை இலைகள் அரைக்க 1 கப் தேங்காய் துருவல் 20 காய்ந்த மிளகாய் 15 சின்ன வெங்காயம் 10 பூண்டு பற்கள் 1 டேபிள்ஸ்பூன் சீரகம் தாளிக்க 1/2 கடுகு 1/2 டீஸ்பூன் உள

உளுந்தம் பருப்பு சோறு - Black Urid Dal Rice (Ulundham Paruppu Sadham)

உளுந்தம்பருப்பு சோறு - கருப்பு உளுந்து, அரிசி, தேங்காய் துருவல் மற்றும் வெந்தயம் சேர்த்து ஒரு ஆரோக்கியமான சாதம். இந்த சாதத்தை எள்ளு துவையல் போட்டு பிசைந்து அவியல் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.  தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1கப் கருப்பு உளுந்தம் பருப்பு - 1/4 கப் மற்றும் ஒரு கை வெந்தயம் - 1 டீஸ்பூன் பூண்டு பற்கள் - 10 தேங்காய்த்துருவல் - 1/2 கப் தண்ணீர் - 3 கப் நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி அதில் வெந்தயத்தை சேர்த்து வறுக்கவும். வெந்தயம் லேசாக வெடிக்க ஆரம்பித்ததும் கருப்பு உளுந்தம் பருப்பை சேர்த்து நன்கு  வாசனை வரும் வரை வறுக்கவும்.  ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசியோடு வறுத்த பருப்பையும் சேர்த்து நன்கு கழுவி விட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். ஒரு பிரஷர் குக்கரில் ஊறவைத்த அரிசி, மேலும் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். பின் அதில் தேவையான அளவு உப்பு, தேங்காய் துருவல் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். குக்கரை மூடி வைத்து 3 விசில் வரும் வரை

திருநெல்வேலி இடி சாம்பார் - Tirunelveli Idi Sambar

தேவையான பொருட்கள் 1/4 கப் துவரம்பருப்பு சிறிய எலுமிச்சை அளவு புளி 15 சின்ன வெங்காயம் 2 பச்சை மிளகாய் 1 அல்லது 2 முருங்கைக்காய் 4 வெண்டைக்காய் 2 கத்திரிக்காய் 5 சிறிய துண்டு மாங்காய் 1/4 டீஸ்பூன் வெந்தயம் 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் சிறிதளவு கறிவேப்பிலை சிறிதளவு கொத்தமல்லி இலை 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு இடி சாம்பார் பொடி செய்ய 7 காய்ந்த மிளகாய் 1 டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு 1/2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு 1.5 டேபிள் ஸ்பூன் தனியா 1 டீஸ்பூன் சீரகம் 1/2 டீஸ்பூன் அரிசி 1/2 டீஸ்பூன் மிளகு 1 டீஸ்பூன் கருப்பு உளுந்து சிறிதளவு எண்ணெய் அரைக்க 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் 4 சின்ன வெங்காயம் 3 பூண்டு பற்கள் 1/4 டீஸ்பூன் சீரகம் செய்முறை துவரம்பருப்பை கழுவி விட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். புளியை இளம் சூடான நீரில் ஊறவைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பு சேர்த்து வறுக்கவும். அவை நிறம் மாற ஆரம்பிக்கும் போது தனியா, சீரகம், அ