திருநெல்வேலி சாம்பாரின் சிறப்பு என்னவென்றால் இதில் சேர்க்கும் தேங்காய், சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து அரைக்கும் விழுது. சாம்பாரின் சுவை அதில் சேர்க்கும் காய்கறிகளில் அடங்கியுள்ளது. முருங்கைக்காய், வெண்டைக்காய், கத்திரிக்காய், மாங்காய் மற்றும் சின்ன வெங்காயம் முக்கிய காய்கறிகளாகும்.
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
- 1/4 கப் துவரம்பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் புளி
- 1 முருங்கைக்காய்
- 1 கத்தரிக்காய்
- 4 வெண்டைக்காய்
- 1 தக்காளி
- 12 சின்ன வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 1/4 டீஸ்பூன் வெந்தயம்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
- 2.5 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- சிறிது கறிவேப்பிலை
- சிறிது கொத்தமல்லி இலை
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
அரைக்க
- 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- 3 சின்ன வெங்காயம்
- 2 பூண்டு பற்கள்
- 1/2 டீஸ்பூன் சீரகம்
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் புளியை கொதிக்கும் நீரில் போட்டு 30 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். துவரம்பருப்பை நன்றாக கழுவி விட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கொள்ளவும்.
- பின் துவரம்பருப்பை ஒரு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வைக்கவும்.
- காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை தோலுரித்து கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.
- தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு குழம்பு பாத்திரத்தில் புளிக்கரைசலை சேர்க்கவும். பின் அதில் கத்தரிக்காய், முருங்கைக்காய், மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கைகளால் நன்கு கரைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம், பின் அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் வெண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வதக்கிய பொருட்களை புளிக்கரைச்சலில் சேர்க்கவும். மிதமான தீயில் காய்கறிகளை புளிக்கரைச்சலில் நன்கு வேகவிடவும்.
- அவை வேகும் போது, குக்கரை திறந்து நன்கு மசித்து கொள்ளவும். பின் அதோடு அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- காய்கறிகள் நன்கு வெந்ததும் நறுக்கிய தக்காளி மற்றும் கலந்து வைத்துள்ள பருப்பு கலவை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- சாம்பார் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது பெருங்காயத்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.
- பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் கொதித்ததும் இறக்கவும்.
- வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பின் சூடான சாம்பாரில் கலந்து கொள்ளவும். சுவையான திருநெல்வேலி சாம்பார் தயார்.
Comments
Post a Comment