வீட்டிலேயே சுவையான ஹோட்டல் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா. இதற்கு நன்கு பழுத்த தக்காளி பழம் வைத்து செய்தால் நன்றாக இருக்கும். முந்திரிப் பருப்பை 1 மணி நேரம் நன்கு ஊறவைத்து அரைத்து சேர்த்தால் கிரேவி நன்கு கெட்டியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
- 250 கிராம் பனீர்
- 6 பூண்டு
- 1 டீஸ்பூன் இஞ்சி
- 6 நன்கு பழுத்த தக்காளி
- 12 முந்திரிப்பருப்பு
- 1 பிரிஞ்சி இலை
- 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
- 1 டீஸ்பூன் கஷ்மீர் மிளகாய் தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் சர்க்கரை
- 1 டேபிள் ஸ்பூன் கஸுரி மேத்தி இலைகள்
- 1 டேபிள் ஸ்பூன் ஃப்ரெஷ் கிரீம்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
1. தக்காளியை நன்றாக கழுவிக்கொள்ளவும். பின் கத்தியால் x வடிவில் லேசாக கீறிக் கொள்ளவும்.பின் தண்ணீர் விட்டு வேகவைத்து கொள்ளவும். பின் தோலுரித்துக்கொள்ளவும்.
2. ஒரு கிண்ணத்தில் முந்திரி பருப்பை இளஞ்சூடான தண்ணீரில் 1 மணி நேரம்ஊறவைக்கவும். பின் நைஸாக அரைக்கவும்.
3. இஞ்சி பூண்டு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பின் வேகவைத்த தக்காளியை நைசாக அரைத்துக்கொள்ளவும்.
4. அகலமான கடாயில் வெண்ணெயை காயவைத்து பிரிஞ்சி இலை சேர்த்து வாசம் வந்த பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
5. பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். மிதமான தீயில் வதக்கவும்.
6. அவை வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும். பின் முந்திரி விழுதை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
7. பின் 1.5 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் கரம் மசாலா தூள் சேர்க்கவும்.
8. மசாலா சிறிது கெட்டியான பின் கஸுரி மேத்தி இலைகள் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
9. பின் நறுக்கிய பனீர் துண்டுகளை சேர்த்து மெதுவாக கிளறவும். பனீர் துண்டுகள் மசாலா வோடு கலந்த பின் ஃபெரஷ் கிரீம் சேர்த்து லேசான கொதி வந்ததும் இறக்கவும்.
Comments
Post a Comment