Skip to main content

நேந்திரம் பழம் அல்வா - Nenthram Pazham Halwa

நேந்திரம் பழம் அல்வா 

பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மூன்று பொருட்களை  வைத்து  பத்தே நிமிடத்தில் தித்திப்பான அல்வா செய்திடலாம். நேந்திரம் பழம் மற்றும் வெல்லம் ஆகிய இரண்டு பொருட்களிலும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இந்த அல்வா எல்லா வயதினருக்கும் ஏற்ற இனிப்பாகும்.


தேவையான பொருட்கள்

  • நன்கு பழுத்த நேந்திரம் பழம் - 3
  • பாகு வெல்லம் - 200 கிராம்
  • நெய் - 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை

  1. நேந்திரம் பழத்தின் தோலை உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தை நன்கு பொடித்துக் கொள்ளவும்.
  2. ஒரு கனமான கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பழத்தை போட்டு கைவிடாமல் வதக்கவும். 
  3. பழம் நன்கு மசிந்து வரும் வரை கைவிடாமல் வதக்கவும். பழம் நன்கு வெந்ததும் துருவிய வெல்லத்தை போட்டு மேலும் சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும். வெல்லம் நன்கு கரைந்து பழத்தோடு சேரும் வரை கைவிடாமல் கிளறவும்.
  4. அல்வா நன்கு ஒட்டாமல் நெய் மிதக்கும் வரும் வரை கிளறி இறக்கவும். சூடாக பரிமாறவும். 

குறிப்பு

இந்த அல்வாவிற்கு நேந்திரம் பழத்தின் தோல் நன்கு கருப்பு நிறமாக நன்கு பழுத்து இருக்க வேண்டும். 

Comments

Popular posts from this blog

குடமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா - Capsicum Potato Masala

குடமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை வைத்து ஒரு திடீர் சைட் டிஷ். எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் அல்லது சப்பாத்தி, பூரிக்கு பரிமாறலாம். குடமிளகாயை அதிக நேரம் எண்ணெயில் வதக்கினால் அதன் நிறமும் சுவையும் மாறிவிடும். இதில் சாம்பார் பொடிக்கு பதிலாக சிறிது மிளகாய்த்தூள் அல்லது மிளகுத்தூள் சேர்த்து செய்யலாம். தேவையான பொருட்கள் 1 பச்சை குடைமிளகாய் 1 உருளைக்கிழங்கு 1/4 டீஸ்பூன் சீரகம் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் சாம்பார் பொடி 1 டேபிள் ஸ்பூன் புளிக்கரைசல் 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு செய்முறை குடைமிளகாய் மற்றும் உருளைக் கிழங்கை நீளமாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய கிழங்கை சேர்த்து வதக்கவும். அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். உருளைக்கிழங்கு நன்கு வதங்கியதும் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.  குடைமிளகாய் லேசாக வதங்கியதும் புளிக்கரைசல் மற்றும் சாம்பார்  பொடி சேர்த்து 2 நிமிடங்கள் கெட்டியானத...

திருநெல்வேலி கூட்டாஞ்சோறு - Tirunelveli Kootanchoru

கூட்டாஞ்சோறு - திருநெல்வேலியின் மிகவும் பிரபலமான மதிய உணவு. காய்கறிகள், பருப்பு, அரிசி மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சோறு. இதற்கு நாட்டு வாழைக்காய், வெள்ளை கத்திரிக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், மாங்காய் மற்றும் முருங்கைக்கீரை முக்கிய காய்கறிகளாகும். இந்த சோறு செய்து ஆறிய பின் இதில் இருக்கும் புளிப்பு மற்றும் காரம் சமமாக சேர்ந்து சுவையாக இருக்கும். இதற்கு கூழ் வத்தல் அல்லது அப்பளம் வைத்து பரிமாறவும் . தேவையான பொருட்கள் 2 கப் புழுங்கல் அரிசி 1/2 கப் துவரம்பருப்பு பெரிய எலுமிச்சை அளவு புளி 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 10 சின்ன வெங்காயம் 3 பச்சை மிளகாய் உப்பு தேவையான அளவு காய்கறிகள் 2 கேரட் 10 பீன்ஸ் 10 கொத்தவரங்காய் 2 முருங்கைக்காய் 7 கத்தரிக்காய் 1 வாழைக்காய் 1 உருளைக்கிழங்கு சிறிதளவு மாங்காய் துண்டுகள் 1 கப் முருங்கைக்கீரை இலைகள் அரைக்க 1 கப் தேங்காய் துருவல் 20 காய்ந்த மிளகாய் 15 சின்ன வெங்காயம் 10 பூண்டு பற்கள் 1 டேபிள்ஸ்பூன் சீரகம் தாளிக்க 1/2 கடுகு 1/2 டீஸ்பூன் உள...

பட்டாணி மசாலா - Green peas masala

https://virundhombaltamil.blogspot.com/2019/05/green-peas-masala.html பச்சை பட்டாணி மசாலா மிகவும் எளிதானது. 30 நிமிடங்களில் சுவையான மசாலா செய்ய வேண்டுமா இதை செய்து பாருங்கள். இதற்கு காய்ந்த பச்சை பட்டாணி மற்றும் நன்கு பழுத்த தக்காளி வைத்து செய்தால் மசாலா மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள் 1/2 கப் காய்ந்த பச்சை பட்டாணி 2 வெங்காயம் 3 தக்காளி 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன் மல்லித்தூள் 2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் 1 டீஸ்பூன் சர்க்கரை 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை 1/2 டீஸ்பூன் நெய் 1/2 டீஸ்பூன் சோம்பு 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு செய்முறை காய்ந்த பச்சை பட்டாணியை 2 முறை கழுவி பின் 1 கப் தண்ணீரில் 4 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். பின் குக்கரில் 4 முதல் 6 விசில் வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும், தக்காளியையும் தனித் தனியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு போட்டு பொரிந்ததும் வெங்காய விழுதை போட்டு வதக்கவும். அவை நன்கு சுருண்டு வதங்கியதும் தக்காளி விழுதை போட்டு வதக்கவும். இர...