Skip to main content

வெஜிடபிள் பிரியாணி - ஈஸி வெஜிடபிள் பிரியாணி - Vegetable Biryani

குழந்தைகளுக்கு விடுமுறை நாட்களில் இந்த சுலபமான வெஜிடபிள் பிரியாணியை செய்து கொடுங்கள். பழைய பாஸ்மதி அரிசியை வைத்து செய்தால் 1 பங்கு அரிசிக்கு 2 பங்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். எந்த வகையான பிரியாணி அல்லது புலவ்விற்கு வீட்டில் ஃப்ரெஷ்ஷாக அரைக்கும் இஞ்சி பூண்டு விழுது வைத்து செய்தால் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.




தேவையான பொருட்கள்
  • 1 கப் பாஸ்மதி அரிசி
  • 15 பூண்டு பற்கள்
  • சிறிய துண்டு இஞ்சி
  • 1 கேரட்
  • 7 பீன்ஸ்
  • 1 உருளைக்கிழங்கு
  • 7 காலிஃப்ளவர் பூக்கள்
  • 1/4 கப் பச்சை பட்டாணி
  • 1 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 2 தக்காளி
  • 1/4 கப் கொத்தமல்லி இலை
  • 1/4 கப் புதினா
  • 2 டேபிள் ஸ்பூன் கெட்டியான தயிர்
  • 2 டீஸ்பூன் பிரியாணி மசாலா தூள்
  • 1 எலுமிச்சை பழம்
  • 1 பிரியாணி இலை
  • 2 சிறிய துண்டு பட்டை
  • 5 கிராம்பு
  • 4 ஏலக்காய்
  • சிறிது கல்பாசி
  • 2 அன்னாசிப்பூ
  • 2 டேபிள் நெய்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
செய்முறை
  1. ஒரு அகலமான பாத்திரத்தில் பாஸ்மதி அரிசியை சேர்த்து நன்கு கழுவிக் கொள்ளவும். பின் 1 கப் தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். 20 நிமிடங்களுக்கு பின் தண்ணீரை முழுவதும் வடித்து வைக்கவும்.
  2. காய்கறிகளை விருப்பமான வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.
  3. ஒரு சிறிய சட்னி ஜாரில் பூண்டு பற்கள் மற்றும் இஞ்சி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  4. ஒரு அகலமான கனமான கடாயில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, கல்பாசி சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.
  5. பின் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  6. பின் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  7. பின் நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, காலிஃப்ளவர் பூக்கள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  8. பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  9. தக்காளி வதங்கியதும் புதினா மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  10. அவை நன்கு வதங்கியதும் பிரியாணி மசாலா பொடி சேர்த்து காய்கறிகளோடு நன்கு கலந்து கொள்ளவும். பின் கெட்டித் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  11. பின் 2 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  12. காய்கறிகள் சிறிது வேகும் வரை மூடிப் போட்டு வேகவிடவும்.
  13. பின் இந்த கலவையை மெதுவாக பிரஷர் குக்கர்க்கு மாற்றி மூடிப்போட்டு சிறிய தீயில் 10 - 15 நிமிடங்கள் வைக்கவும். 15 நிமிடங்களுக்கு பின் குக்கரை திறந்து எலுமிச்சை சாறு சேர்த்து சிறிது நெய் விட்டு மெதுவாக கிளறி பரிமாறும் பாத்திரத்தில் மாற்றி மூடிப்போட்டு வைக்கவும். தயிர் வெங்காயம் வைத்து பரிமாறவும்.
வெஜிடபிள் பிரியாணி செய்முறையை படிப்படியாக பட விளக்கத்தோடு காண கீழே இருக்கும் லிங்க் மேலே கிளிக் செய்யவும்.

வெஜிடபிள் பிரியாணி

Comments

Popular posts from this blog

திருநெல்வேலி கூட்டாஞ்சோறு - Tirunelveli Kootanchoru

கூட்டாஞ்சோறு - திருநெல்வேலியின் மிகவும் பிரபலமான மதிய உணவு. காய்கறிகள், பருப்பு, அரிசி மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சோறு. இதற்கு நாட்டு வாழைக்காய், வெள்ளை கத்திரிக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், மாங்காய் மற்றும் முருங்கைக்கீரை முக்கிய காய்கறிகளாகும். இந்த சோறு செய்து ஆறிய பின் இதில் இருக்கும் புளிப்பு மற்றும் காரம் சமமாக சேர்ந்து சுவையாக இருக்கும். இதற்கு கூழ் வத்தல் அல்லது அப்பளம் வைத்து பரிமாறவும் . தேவையான பொருட்கள் 2 கப் புழுங்கல் அரிசி 1/2 கப் துவரம்பருப்பு பெரிய எலுமிச்சை அளவு புளி 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 10 சின்ன வெங்காயம் 3 பச்சை மிளகாய் உப்பு தேவையான அளவு காய்கறிகள் 2 கேரட் 10 பீன்ஸ் 10 கொத்தவரங்காய் 2 முருங்கைக்காய் 7 கத்தரிக்காய் 1 வாழைக்காய் 1 உருளைக்கிழங்கு சிறிதளவு மாங்காய் துண்டுகள் 1 கப் முருங்கைக்கீரை இலைகள் அரைக்க 1 கப் தேங்காய் துருவல் 20 காய்ந்த மிளகாய் 15 சின்ன வெங்காயம் 10 பூண்டு பற்கள் 1 டேபிள்ஸ்பூன் சீரகம் தாளிக்க 1/2 கடுகு 1/2 டீஸ்பூன் உள

உளுந்தம் பருப்பு சோறு - Black Urid Dal Rice (Ulundham Paruppu Sadham)

உளுந்தம்பருப்பு சோறு - கருப்பு உளுந்து, அரிசி, தேங்காய் துருவல் மற்றும் வெந்தயம் சேர்த்து ஒரு ஆரோக்கியமான சாதம். இந்த சாதத்தை எள்ளு துவையல் போட்டு பிசைந்து அவியல் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.  தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1கப் கருப்பு உளுந்தம் பருப்பு - 1/4 கப் மற்றும் ஒரு கை வெந்தயம் - 1 டீஸ்பூன் பூண்டு பற்கள் - 10 தேங்காய்த்துருவல் - 1/2 கப் தண்ணீர் - 3 கப் நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி அதில் வெந்தயத்தை சேர்த்து வறுக்கவும். வெந்தயம் லேசாக வெடிக்க ஆரம்பித்ததும் கருப்பு உளுந்தம் பருப்பை சேர்த்து நன்கு  வாசனை வரும் வரை வறுக்கவும்.  ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசியோடு வறுத்த பருப்பையும் சேர்த்து நன்கு கழுவி விட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். ஒரு பிரஷர் குக்கரில் ஊறவைத்த அரிசி, மேலும் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். பின் அதில் தேவையான அளவு உப்பு, தேங்காய் துருவல் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். குக்கரை மூடி வைத்து 3 விசில் வரும் வரை

திருநெல்வேலி இடி சாம்பார் - Tirunelveli Idi Sambar

தேவையான பொருட்கள் 1/4 கப் துவரம்பருப்பு சிறிய எலுமிச்சை அளவு புளி 15 சின்ன வெங்காயம் 2 பச்சை மிளகாய் 1 அல்லது 2 முருங்கைக்காய் 4 வெண்டைக்காய் 2 கத்திரிக்காய் 5 சிறிய துண்டு மாங்காய் 1/4 டீஸ்பூன் வெந்தயம் 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் சிறிதளவு கறிவேப்பிலை சிறிதளவு கொத்தமல்லி இலை 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு இடி சாம்பார் பொடி செய்ய 7 காய்ந்த மிளகாய் 1 டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு 1/2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு 1.5 டேபிள் ஸ்பூன் தனியா 1 டீஸ்பூன் சீரகம் 1/2 டீஸ்பூன் அரிசி 1/2 டீஸ்பூன் மிளகு 1 டீஸ்பூன் கருப்பு உளுந்து சிறிதளவு எண்ணெய் அரைக்க 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் 4 சின்ன வெங்காயம் 3 பூண்டு பற்கள் 1/4 டீஸ்பூன் சீரகம் செய்முறை துவரம்பருப்பை கழுவி விட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். புளியை இளம் சூடான நீரில் ஊறவைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பு சேர்த்து வறுக்கவும். அவை நிறம் மாற ஆரம்பிக்கும் போது தனியா, சீரகம், அ