சிறுகீரை தொவரம் (பொரியல்) - பொடியாக நறுக்கிய கீரையோடு சின்ன வெங்காயம் தாளித்து அரைத்த தேங்காய் விழுது, சிறிது வேகவைத்த பருப்பும் சேர்த்து சுவையான ஆரோக்கியமான பொரியல். இதை திருநெல்வேலி சமையலில் கொத்திக் கீரை என்று கூறுவோம். இதில் சிறுகீரைக்கு பதிலாக அரைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை வைத்து செய்யலாம்.
தேவையானவை பொருட்கள்
அரைக்க
செய்முறை
தேவையானவை பொருட்கள்
- சிறுகீரை - 1 கட்டு
- பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1/4 கப்
- வேகவைத்த பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 1
- மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
அரைக்க
- தேங்காய்த்துருவல் - 4 டேபிள் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 3
- பூண்டு பற்கள் - 2
- காய்ந்த மிளகாய் - 1
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
செய்முறை
- சீறுகீரையின் இளம் தண்டுகளோடு இருக்கும் இலைகளை தண்டோடு சேர்த்து ஆய்ந்துக் கொள்ளவும். தண்ணீரில் இரண்டு முறை மண் போக கழுவிக் கொள்ளவும்.
- பின் வரிசையாக அடுக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- தேங்காய்த்துருவல், சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், மிளகாய் வற்றல் மற்றும் சீரகம் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்.
- கீரையை சிறிது நேரம் கைவிடாமல் வதக்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
- கீரை நன்கு வெந்ததும் வேகவைத்த பருப்பு, அரைத்த தேங்காய் விழுது, மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வதக்கவும்.
- கீரையோடு பருப்பும் தேங்காய் விழுதும் சமமாக கலந்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் இறக்கவும். விருப்பப்பட்டால் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
Comments
Post a Comment