Skip to main content

பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயாசம் - Pasiparuppu Payasam

பாசிப்பருப்பு, ஜவ்வரிசி, வெல்லம் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் தித்திப்பான பாயாசம். இதை அடிகனமான அல்லது வெண்கலம் பாத்திரத்தில் செய்தால் நன்றாக இருக்கும். பாயசத்திற்கு பாகு வெல்லம் சேர்த்து செய்தால் அதன் சுவை நன்றாக இருக்கும். பூஜை நிவேதனமாக இதை எளிதில் செய்திடலாம். தேங்காய்ப்பாலுக்கு பதிலாக தேங்காய்யை நைசாக அரைத்து சேர்த்து கொள்ளலாம்.


தேவையானவை பொருட்கள்

  • 1/2 கப் பாசிப்பருப்பு
  • 1/4 கப் ஜவ்வரிசி
  • 1.25 கப் பாகு வெல்லம்
  • 1 கப் தேங்காய்ப்பால்
  • 10 உடைத்த முந்திரிப்பருப்பு
  • 4 டேபிள் ஸ்பூன் நெய்

செய்முறை

  1. வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி அதில் பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். பாசிப்பருப்பு பொன்னிறமாகும் போது ஜவ்வரிசியை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  2. பின் தண்ணீரில் இரண்டு முறை கழுவி விட்டு ஒரு சிறிய குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 முதல் 5 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
  3. பருப்பு வேகும் போது தட்டிய வெல்லத்தை 1/2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். 
  4. வெல்லம் நன்கு கரைந்ததும் அடி கனமான பாத்திரத்தில் அல்லது வெண்கலம் பானையில் வடிகெட்டி கொள்ளவும். 
  5. குக்கரை திறந்து பருப்பை லேசாக மசித்துக் கொள்ளவும். பின் வெல்லத்தோடு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 3 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும். ஒரு கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்கவும். 
  6. பருப்பு நன்கு வெல்லத்தோடு சேர்ந்ததும் சிறிது நேரம் அடுப்பை அணைத்து விடவும்.
  7. பத்து நிமிடங்களுக்கு பின் தேங்காய்ப்பாலை மெதுவாக சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் குறைந்த சூட்டில் வைத்து லேசாக கொதித்ததும் இறக்கவும்.
  8. வாணலியில் நெய் விட்டு சூடானதும் உடைத்த முந்திரிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து சூடான பாயசத்தில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.


Comments

Popular posts from this blog

தேங்காய் பராத்தா - Coconut Paratha

தேங்காய் பராத்தா மிக எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய எளிமையான உணவாகும். எந்த வயதினருக்கும் ஏற்றது.   தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 2 கப் தேங்காய்காய் துருவல் - 1 கப் பச்சை மிளகாய் - 1, பொடியாக நறுக்கிக் கொள்ளவும் புதினா - 4 இலைகள் கொத்தமல்லி இலை - சிறிதளவு நெய் - 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு உப்பு தேவையான அளவு செய்முறை ஒரு அகலமான பவுலில் கோதுமை மாவு, நெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவு கைகளில் ஒட்டாத பதம் வரும் வரை பிசைந்து கொள்ளவும். மாவின் மேலே சிறிது எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் புதினா சேர்த்து லேசாக வதக்கவும். பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி ஆறவிடவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின் சிறிய சப்பாத்தியாக போட்டு நடுவில் 1 டேபிள் ஸ்பூன் வதக...

திருநெல்வேலி இடி சாம்பார் - Tirunelveli Idi Sambar

தேவையான பொருட்கள் 1/4 கப் துவரம்பருப்பு சிறிய எலுமிச்சை அளவு புளி 15 சின்ன வெங்காயம் 2 பச்சை மிளகாய் 1 அல்லது 2 முருங்கைக்காய் 4 வெண்டைக்காய் 2 கத்திரிக்காய் 5 சிறிய துண்டு மாங்காய் 1/4 டீஸ்பூன் வெந்தயம் 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் சிறிதளவு கறிவேப்பிலை சிறிதளவு கொத்தமல்லி இலை 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு இடி சாம்பார் பொடி செய்ய 7 காய்ந்த மிளகாய் 1 டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு 1/2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு 1.5 டேபிள் ஸ்பூன் தனியா 1 டீஸ்பூன் சீரகம் 1/2 டீஸ்பூன் அரிசி 1/2 டீஸ்பூன் மிளகு 1 டீஸ்பூன் கருப்பு உளுந்து சிறிதளவு எண்ணெய் அரைக்க 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் 4 சின்ன வெங்காயம் 3 பூண்டு பற்கள் 1/4 டீஸ்பூன் சீரகம் செய்முறை துவரம்பருப்பை கழுவி விட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். புளியை இளம் சூடான நீரில் ஊறவைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பு சேர்த்து வறுக்கவும். அவை நிறம் மாற ஆரம்பிக்கும் போது தனியா, சீரகம், அ...

திருநெல்வேலி கூட்டாஞ்சோறு - Tirunelveli Kootanchoru

கூட்டாஞ்சோறு - திருநெல்வேலியின் மிகவும் பிரபலமான மதிய உணவு. காய்கறிகள், பருப்பு, அரிசி மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சோறு. இதற்கு நாட்டு வாழைக்காய், வெள்ளை கத்திரிக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், மாங்காய் மற்றும் முருங்கைக்கீரை முக்கிய காய்கறிகளாகும். இந்த சோறு செய்து ஆறிய பின் இதில் இருக்கும் புளிப்பு மற்றும் காரம் சமமாக சேர்ந்து சுவையாக இருக்கும். இதற்கு கூழ் வத்தல் அல்லது அப்பளம் வைத்து பரிமாறவும் . தேவையான பொருட்கள் 2 கப் புழுங்கல் அரிசி 1/2 கப் துவரம்பருப்பு பெரிய எலுமிச்சை அளவு புளி 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 10 சின்ன வெங்காயம் 3 பச்சை மிளகாய் உப்பு தேவையான அளவு காய்கறிகள் 2 கேரட் 10 பீன்ஸ் 10 கொத்தவரங்காய் 2 முருங்கைக்காய் 7 கத்தரிக்காய் 1 வாழைக்காய் 1 உருளைக்கிழங்கு சிறிதளவு மாங்காய் துண்டுகள் 1 கப் முருங்கைக்கீரை இலைகள் அரைக்க 1 கப் தேங்காய் துருவல் 20 காய்ந்த மிளகாய் 15 சின்ன வெங்காயம் 10 பூண்டு பற்கள் 1 டேபிள்ஸ்பூன் சீரகம் தாளிக்க 1/2 கடுகு 1/2 டீஸ்பூன் உள...