காலை உணவிற்கு இட்லி மற்றும் தோசை தானா என்று கேட்பவர்களுக்கு இந்த ஆரோக்கியமான கொள்ளு தோசையை செய்து கொடுங்கள். மீண்டும் மீண்டும் வேண்டும் என்று கேட்பார்கள். கொள்ளு பருப்பில் ஏராளமான நன்மைகள் உள்ளன. ஆனாலும் இதை அடிக்கடி உண்ணக்கூடாது. மாதத்திற்கு இரண்டுமுறை சேர்த்தால் போதுமானது.
தேவையான பொருட்கள்
செய்முறை
தேவையான பொருட்கள்
- இட்லி அரிசி - 1 கப்
- பச்சரிசி - 1/2 கப்
- கொள்ளு - 1.5 கப்
- கல் உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் கொள்ளுபருப்பு சேர்த்து தண்ணீரில் மூன்று முறை நன்கு கழுவிக்கொள்ளவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊறவைக்கவும்.
- பின் மீண்டும் ஒரு முறை தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். கிரைண்டரில் ஊறவைத்தவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
- கிரைண்டரில் அரைக்கும் போது ஓரத்தில் இருக்கும் அரிசி, பருப்பை ஒதுக்கி விட்டு தண்ணீரை தெளித்து பொங்க பொங்க நன்கு அரைத்துக் கொள்ளவும். சுமார் 30 நிமிடங்கள் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த மாவை பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். பின் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து கைகளால் நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
- அரைத்த மாவை 8 மணி நேரம் புளிக்க விடவும். பின் மாவை கரண்டியால் நன்கு கலந்து கொள்ளவும்.
- தோசைக்கல்லை நன்கு சூடாக்கி அதில் 1.5 கரண்டி மாவை எடுத்து தோசைப்போல் இடவும். தோசையை சுற்றி 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு முறுகியதும் திருப்பிப் போட்டு வேகவைத்து இறக்கவும். சூடாக காரச் சட்னியுடன் பரிமாறவும்.
Comments
Post a Comment