Skip to main content

முட்டைக்கோஸ் கேரட் பீன்ஸ் தொவரம் (பொரியல்) - Cabbage Carrot Beans Poriyal

திருநெல்வேலியில் இதை கதம்ப பொரியல் என்று அழைப்பது வழக்கம். வாரத்தில் ஒரு நாள் இந்த பொரியலை கட்டாயம் செய்வதுண்டு. சாம்பார், ரசம் மற்றும் எந்த வகையான குழம்புகளுக்கும் சுவையாக இருக்கும். இந்த பொரியல் மீதம் இருந்தால் இரவு சுவையான கதம்ப பொரியல் ஊத்தப்பம் செய்திடுவோம்.



தேவையான பொருட்கள்

  • முட்டைக்கோஸ் - 250 கிராம்
  • கேரட் - 1
  • பீன்ஸ் - 7
  • பச்சை பட்டாணி - 1/4 கப்
  • தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • கடுகு - 1/2 டீஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் - சிறிது
  • எண்ணெய் - 2 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

அரைக்க

  • தேங்காய் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 1
  • சின்ன வெங்காயம் - 3
  • பூண்டு - 1
  • சீரகம் - 1/4 டீஸ்பூன்

செய்முறை

  1. முட்டைக்கோஸை நன்கு கழுவி தண்டுகளை பிரித்து பொடியாக நறுக்கவும். கேரட் மற்றும் பீன்ஸை பொடியாக நறுக்கவும். 
  2. ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.
  3. அவை வேகும் போது தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் சீரகம் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  4. காய்கறி நன்கு வெந்ததும் ஒரு அகலமான பேசினில் மாற்றிக் கொள்ளவும்.
  5. பின் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  6. வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பின் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கலந்த முட்டைக்கோஸ் கேரட் கலவையை சேர்த்து நன்கு கலந்து வதக்கவும்.
  7. கடைசியாக சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். சுவையான கதம்ப பொரியல் தயார்.

குறிப்பு

  1. காய்கறிகளை பதமாக சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுத்தால் காய்கறிகள்  நிறம் மாறாமல் பார்பதற்கும் சுவைப்பதற்கும் நன்றாக இருக்கும். காய்கறிகள் அதிக நேரம் வேக வைத்தால் சுவை நன்றாக இருக்காது.
  2. முட்டைக்கோஸ் வாங்கும் போது கனமாக இருக்க வேண்டும். 


Comments

Popular posts from this blog

தேங்காய் பராத்தா - Coconut Paratha

தேங்காய் பராத்தா மிக எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய எளிமையான உணவாகும். எந்த வயதினருக்கும் ஏற்றது.   தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 2 கப் தேங்காய்காய் துருவல் - 1 கப் பச்சை மிளகாய் - 1, பொடியாக நறுக்கிக் கொள்ளவும் புதினா - 4 இலைகள் கொத்தமல்லி இலை - சிறிதளவு நெய் - 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு உப்பு தேவையான அளவு செய்முறை ஒரு அகலமான பவுலில் கோதுமை மாவு, நெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவு கைகளில் ஒட்டாத பதம் வரும் வரை பிசைந்து கொள்ளவும். மாவின் மேலே சிறிது எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் புதினா சேர்த்து லேசாக வதக்கவும். பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி ஆறவிடவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின் சிறிய சப்பாத்தியாக போட்டு நடுவில் 1 டேபிள் ஸ்பூன் வதக...

திருநெல்வேலி இடி சாம்பார் - Tirunelveli Idi Sambar

தேவையான பொருட்கள் 1/4 கப் துவரம்பருப்பு சிறிய எலுமிச்சை அளவு புளி 15 சின்ன வெங்காயம் 2 பச்சை மிளகாய் 1 அல்லது 2 முருங்கைக்காய் 4 வெண்டைக்காய் 2 கத்திரிக்காய் 5 சிறிய துண்டு மாங்காய் 1/4 டீஸ்பூன் வெந்தயம் 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் சிறிதளவு கறிவேப்பிலை சிறிதளவு கொத்தமல்லி இலை 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு இடி சாம்பார் பொடி செய்ய 7 காய்ந்த மிளகாய் 1 டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு 1/2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு 1.5 டேபிள் ஸ்பூன் தனியா 1 டீஸ்பூன் சீரகம் 1/2 டீஸ்பூன் அரிசி 1/2 டீஸ்பூன் மிளகு 1 டீஸ்பூன் கருப்பு உளுந்து சிறிதளவு எண்ணெய் அரைக்க 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் 4 சின்ன வெங்காயம் 3 பூண்டு பற்கள் 1/4 டீஸ்பூன் சீரகம் செய்முறை துவரம்பருப்பை கழுவி விட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். புளியை இளம் சூடான நீரில் ஊறவைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பு சேர்த்து வறுக்கவும். அவை நிறம் மாற ஆரம்பிக்கும் போது தனியா, சீரகம், அ...

திருநெல்வேலி கூட்டாஞ்சோறு - Tirunelveli Kootanchoru

கூட்டாஞ்சோறு - திருநெல்வேலியின் மிகவும் பிரபலமான மதிய உணவு. காய்கறிகள், பருப்பு, அரிசி மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சோறு. இதற்கு நாட்டு வாழைக்காய், வெள்ளை கத்திரிக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், மாங்காய் மற்றும் முருங்கைக்கீரை முக்கிய காய்கறிகளாகும். இந்த சோறு செய்து ஆறிய பின் இதில் இருக்கும் புளிப்பு மற்றும் காரம் சமமாக சேர்ந்து சுவையாக இருக்கும். இதற்கு கூழ் வத்தல் அல்லது அப்பளம் வைத்து பரிமாறவும் . தேவையான பொருட்கள் 2 கப் புழுங்கல் அரிசி 1/2 கப் துவரம்பருப்பு பெரிய எலுமிச்சை அளவு புளி 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 10 சின்ன வெங்காயம் 3 பச்சை மிளகாய் உப்பு தேவையான அளவு காய்கறிகள் 2 கேரட் 10 பீன்ஸ் 10 கொத்தவரங்காய் 2 முருங்கைக்காய் 7 கத்தரிக்காய் 1 வாழைக்காய் 1 உருளைக்கிழங்கு சிறிதளவு மாங்காய் துண்டுகள் 1 கப் முருங்கைக்கீரை இலைகள் அரைக்க 1 கப் தேங்காய் துருவல் 20 காய்ந்த மிளகாய் 15 சின்ன வெங்காயம் 10 பூண்டு பற்கள் 1 டேபிள்ஸ்பூன் சீரகம் தாளிக்க 1/2 கடுகு 1/2 டீஸ்பூன் உள...