Skip to main content

ப்ரோக்கோலி மசாலா - Broccoli Masala

ப்ரோக்கோலியை வைத்து சுவையான ஹோட்டல் ஸ்டைல் மசாலா. ப்ரோக்கோலியை அரைவேக்காடு வேகவைத்து அல்லது பச்சையாக சாப்பிட்டால் அதன் சத்துக்கள் முழுவதும் கிடைக்கும். இதில் ப்ரோக்கோலிக்கு பதில் காளான் வைத்து செய்யலாம்.




தேவையான பொருட்கள்
  • 1 சிறிய ப்ரோக்கோலி
  • 1 வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 3/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டீஸ்பூன் சர்க்கரை
  • 2 டேபிள் ஸ்பூன் ஃபரஷ் கிரீம்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு
அரைக்க
  • 2 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 10 பாதாம்
செய்முறை
1. ஒரு சிறிய குக்கரில் 2 வெங்காயம், 2 தக்காளி, பாதாம் சேர்க்கவும். 1 கப் தண்ணீர் விட்டு 1 விசில் வந்ததும் இறக்கவும்.
2.  பெரிய பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின் அதில் ப்ரோக்கோலி பூக்களை போட்டு மூடி வைக்கவும்.
பின் அதில் ஐஸ் கட்டிகள் போட்டு குளிர விடவும். 5 நிமிடங்கள் கழித்து தண்ணீரை வடிகட்டவும்.
3. வேகவைத்த வெங்காயம், தக்காளி, பாதாம் பருப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
4. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். குறைந்த தீயில் வைத்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
5. பின் அரைத்த விழுதை போட்டு வதக்கவும். 2 நிமிடங்கள் வதக்கிய பின்னர் 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். சிறிது கொதித்த பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து கிளறவும்.
6. பின் ப்ரோக்கோலி பூக்களை சேர்த்து கிளறவும். தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
7. பின் கஸுரி மேத்தி இலைகள், சீனி, ஃப்ரெஷ் கிரீம் மற்றும் 1/2 கப் தண்ணீர் விட்டு 10 - 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். மசாலா வின் மேலே எண்ணெய் மிதக்கும் வரை கொதிக்க வைத்தால் போதும். சுவையான ப்ரோக்கோலி மசாலா தயார். ரொட்டி, புலவ், நாண் போன்ற உணவு வகைகளுக்கு சூப்பரான ஸைடு டிஷ்.


Comments

Popular posts from this blog

திருநெல்வேலி கூட்டாஞ்சோறு - Tirunelveli Kootanchoru

கூட்டாஞ்சோறு - திருநெல்வேலியின் மிகவும் பிரபலமான மதிய உணவு. காய்கறிகள், பருப்பு, அரிசி மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சோறு. இதற்கு நாட்டு வாழைக்காய், வெள்ளை கத்திரிக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், மாங்காய் மற்றும் முருங்கைக்கீரை முக்கிய காய்கறிகளாகும். இந்த சோறு செய்து ஆறிய பின் இதில் இருக்கும் புளிப்பு மற்றும் காரம் சமமாக சேர்ந்து சுவையாக இருக்கும். இதற்கு கூழ் வத்தல் அல்லது அப்பளம் வைத்து பரிமாறவும் . தேவையான பொருட்கள் 2 கப் புழுங்கல் அரிசி 1/2 கப் துவரம்பருப்பு பெரிய எலுமிச்சை அளவு புளி 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 10 சின்ன வெங்காயம் 3 பச்சை மிளகாய் உப்பு தேவையான அளவு காய்கறிகள் 2 கேரட் 10 பீன்ஸ் 10 கொத்தவரங்காய் 2 முருங்கைக்காய் 7 கத்தரிக்காய் 1 வாழைக்காய் 1 உருளைக்கிழங்கு சிறிதளவு மாங்காய் துண்டுகள் 1 கப் முருங்கைக்கீரை இலைகள் அரைக்க 1 கப் தேங்காய் துருவல் 20 காய்ந்த மிளகாய் 15 சின்ன வெங்காயம் 10 பூண்டு பற்கள் 1 டேபிள்ஸ்பூன் சீரகம் தாளிக்க 1/2 கடுகு 1/2 டீஸ்பூன் உள

குடமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா - Capsicum Potato Masala

குடமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை வைத்து ஒரு திடீர் சைட் டிஷ். எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் அல்லது சப்பாத்தி, பூரிக்கு பரிமாறலாம். குடமிளகாயை அதிக நேரம் எண்ணெயில் வதக்கினால் அதன் நிறமும் சுவையும் மாறிவிடும். இதில் சாம்பார் பொடிக்கு பதிலாக சிறிது மிளகாய்த்தூள் அல்லது மிளகுத்தூள் சேர்த்து செய்யலாம். தேவையான பொருட்கள் 1 பச்சை குடைமிளகாய் 1 உருளைக்கிழங்கு 1/4 டீஸ்பூன் சீரகம் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் சாம்பார் பொடி 1 டேபிள் ஸ்பூன் புளிக்கரைசல் 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு செய்முறை குடைமிளகாய் மற்றும் உருளைக் கிழங்கை நீளமாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய கிழங்கை சேர்த்து வதக்கவும். அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். உருளைக்கிழங்கு நன்கு வதங்கியதும் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.  குடைமிளகாய் லேசாக வதங்கியதும் புளிக்கரைசல் மற்றும் சாம்பார்  பொடி சேர்த்து 2 நிமிடங்கள் கெட்டியானதும் கொத்த

உளுந்தம் பருப்பு சோறு - Black Urid Dal Rice (Ulundham Paruppu Sadham)

உளுந்தம்பருப்பு சோறு - கருப்பு உளுந்து, அரிசி, தேங்காய் துருவல் மற்றும் வெந்தயம் சேர்த்து ஒரு ஆரோக்கியமான சாதம். இந்த சாதத்தை எள்ளு துவையல் போட்டு பிசைந்து அவியல் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.  தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1கப் கருப்பு உளுந்தம் பருப்பு - 1/4 கப் மற்றும் ஒரு கை வெந்தயம் - 1 டீஸ்பூன் பூண்டு பற்கள் - 10 தேங்காய்த்துருவல் - 1/2 கப் தண்ணீர் - 3 கப் நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி அதில் வெந்தயத்தை சேர்த்து வறுக்கவும். வெந்தயம் லேசாக வெடிக்க ஆரம்பித்ததும் கருப்பு உளுந்தம் பருப்பை சேர்த்து நன்கு  வாசனை வரும் வரை வறுக்கவும்.  ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசியோடு வறுத்த பருப்பையும் சேர்த்து நன்கு கழுவி விட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். ஒரு பிரஷர் குக்கரில் ஊறவைத்த அரிசி, மேலும் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். பின் அதில் தேவையான அளவு உப்பு, தேங்காய் துருவல் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். குக்கரை மூடி வைத்து 3 விசில் வரும் வரை