Skip to main content

வெஜிடபிள் கட்லெட் - மாலை நேர சிற்றுண்டி - Vegetable Cutlet




தேவையான பொருட்கள்
  • 4 சிறிய உருளைக்கிழங்கு
  • 1 கேரட்
  • சிறிய துண்டு பீட்ரூட்
  • 1/4 கப் பச்சை பட்டாணி
  • 1 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
  • 1 டேபிள் டீஸ்பூன் இஞ்சி, பொடியாக நறுக்கியது
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 கப் மைதா மாவு
  • 1/2 கப் பிரெட் தூள் அல்லது ரஸ்க் தூள்
  • 3 பிரெட் ஸ்லைஸ்
  • 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை
  • 300 மில்லி எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
செய்முறை
  1. உருளைக்கிழங்கை தோல் சீவிக்கொள்ளவும். கேரட் மற்றும் பீட்ரூட்டை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை பட்டாணியை உரித்து கொள்ளவும்.
  2. ஒரு சிறிய குக்கரில் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.
  3. பின் வேகவைத்த காய்கறிகளை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். பின் நன்கு ஆறவைத்து கொள்ளவும்.
  4. ஒரு டம்ளர் வைத்து நன்கு காய்கறிகளை மசித்து கொள்ளவும்.
  5. ஒரு கனமான கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. அவை நன்கு வதங்கியதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  7. வெங்காயம் லேசாக வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள்தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
  8. பின் மசித்த காய்கறி கலவை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வரட்டவும்.
  9. அவை நன்கு வரண்டதும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
  10. ஒரு சிறிய பவுலில் 1/2 கப் மைதா மாவை 3/4 கப் தண்ணீர் விட்டு நன்கு கரைத்து வைக்கவும்.
  11. பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
  12. காய்கறி கலவை நன்கு ஆறியதும் பொடித்து வைத்த பிரெட் கிரம்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கலவையை கைகளால் உருட்டும் போது ஒட்டாமல் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் மேலும் பிரெட் கிரம்ஸ் சேர்த்து கொள்ளவும்.
  13. பின் பெரிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின் நடுவில் லேசாக அழுத்தி வடை போல் செய்து கொள்ளவும்.
  14. இப்போது ஒவ்வொரு கட்லெடையும் கரைத்து வைத்துள்ள மைதாவில் இரண்டு பக்கங்களிலும் நன்கு பிரட்டி கொள்ளவும்.
  15. பின் பிரெட் கிரம்ஸில் நன்கு இரண்டு அல்லது மூன்று முறை பிரட்டி தனியே ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  16. கனமான குழிவான வாணலியில் 1/4 கப் எண்ணெய் விட்டு மிதமான தீயில் வைத்து சூடாக்கவும்.
  17. பின் 1 அல்லது 2 கட்லெட் சேர்த்து  அதிரசம் சுடுவது போல் மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக சுடவும்.
  18. 3 கட்லெட் பொரித்த பின் அடுப்பை அணைத்து விட்டு சிறிது ஆறியதும் பின் 1/4 கப் எண்ணெய் விட்டு கட்லெட்களை பொரித்து எடுக்கவும்.
  19. கனமான இரும்பு தோசைக்கல்லில் கட்லெட்களை  எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுடலாம்.
  20. தக்காளி கெட்சப் அல்லது புதினா சட்னி வைத்து சூடாக பரிமாறவும்.
படிப் படியாக பட விளக்கத்துடன் வெஜிடபுள் கட்லெட் செய்முறையை காண கீழே இருக்கும் லிங்க் மேலே கிளிக் செய்யவும்.
Vegetable Cutlet recipe with step by step instructions and photos

Comments

Popular posts from this blog

குடமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா - Capsicum Potato Masala

குடமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை வைத்து ஒரு திடீர் சைட் டிஷ். எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் அல்லது சப்பாத்தி, பூரிக்கு பரிமாறலாம். குடமிளகாயை அதிக நேரம் எண்ணெயில் வதக்கினால் அதன் நிறமும் சுவையும் மாறிவிடும். இதில் சாம்பார் பொடிக்கு பதிலாக சிறிது மிளகாய்த்தூள் அல்லது மிளகுத்தூள் சேர்த்து செய்யலாம். தேவையான பொருட்கள் 1 பச்சை குடைமிளகாய் 1 உருளைக்கிழங்கு 1/4 டீஸ்பூன் சீரகம் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் சாம்பார் பொடி 1 டேபிள் ஸ்பூன் புளிக்கரைசல் 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு செய்முறை குடைமிளகாய் மற்றும் உருளைக் கிழங்கை நீளமாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய கிழங்கை சேர்த்து வதக்கவும். அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். உருளைக்கிழங்கு நன்கு வதங்கியதும் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.  குடைமிளகாய் லேசாக வதங்கியதும் புளிக்கரைசல் மற்றும் சாம்பார்  பொடி சேர்த்து 2 நிமிடங்கள் கெட்டியானத...

திருநெல்வேலி கூட்டாஞ்சோறு - Tirunelveli Kootanchoru

கூட்டாஞ்சோறு - திருநெல்வேலியின் மிகவும் பிரபலமான மதிய உணவு. காய்கறிகள், பருப்பு, அரிசி மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சோறு. இதற்கு நாட்டு வாழைக்காய், வெள்ளை கத்திரிக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், மாங்காய் மற்றும் முருங்கைக்கீரை முக்கிய காய்கறிகளாகும். இந்த சோறு செய்து ஆறிய பின் இதில் இருக்கும் புளிப்பு மற்றும் காரம் சமமாக சேர்ந்து சுவையாக இருக்கும். இதற்கு கூழ் வத்தல் அல்லது அப்பளம் வைத்து பரிமாறவும் . தேவையான பொருட்கள் 2 கப் புழுங்கல் அரிசி 1/2 கப் துவரம்பருப்பு பெரிய எலுமிச்சை அளவு புளி 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 10 சின்ன வெங்காயம் 3 பச்சை மிளகாய் உப்பு தேவையான அளவு காய்கறிகள் 2 கேரட் 10 பீன்ஸ் 10 கொத்தவரங்காய் 2 முருங்கைக்காய் 7 கத்தரிக்காய் 1 வாழைக்காய் 1 உருளைக்கிழங்கு சிறிதளவு மாங்காய் துண்டுகள் 1 கப் முருங்கைக்கீரை இலைகள் அரைக்க 1 கப் தேங்காய் துருவல் 20 காய்ந்த மிளகாய் 15 சின்ன வெங்காயம் 10 பூண்டு பற்கள் 1 டேபிள்ஸ்பூன் சீரகம் தாளிக்க 1/2 கடுகு 1/2 டீஸ்பூன் உள...

திருநெல்வேலி இடி சாம்பார் - Tirunelveli Idi Sambar

தேவையான பொருட்கள் 1/4 கப் துவரம்பருப்பு சிறிய எலுமிச்சை அளவு புளி 15 சின்ன வெங்காயம் 2 பச்சை மிளகாய் 1 அல்லது 2 முருங்கைக்காய் 4 வெண்டைக்காய் 2 கத்திரிக்காய் 5 சிறிய துண்டு மாங்காய் 1/4 டீஸ்பூன் வெந்தயம் 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் சிறிதளவு கறிவேப்பிலை சிறிதளவு கொத்தமல்லி இலை 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு இடி சாம்பார் பொடி செய்ய 7 காய்ந்த மிளகாய் 1 டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு 1/2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு 1.5 டேபிள் ஸ்பூன் தனியா 1 டீஸ்பூன் சீரகம் 1/2 டீஸ்பூன் அரிசி 1/2 டீஸ்பூன் மிளகு 1 டீஸ்பூன் கருப்பு உளுந்து சிறிதளவு எண்ணெய் அரைக்க 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் 4 சின்ன வெங்காயம் 3 பூண்டு பற்கள் 1/4 டீஸ்பூன் சீரகம் செய்முறை துவரம்பருப்பை கழுவி விட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். புளியை இளம் சூடான நீரில் ஊறவைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பு சேர்த்து வறுக்கவும். அவை நிறம் மாற ஆரம்பிக்கும் போது தனியா, சீரகம், அ...