Skip to main content

தேன் குழல் - பலகாரம் - Thenkuzhal

இந்த தேன் குழல் அரிசியை ஊறவைத்து அரைத்து செய்வது. அரிசியை அரைத்து செய்வதினால் இதன் நிறமும் சுவையும் அற்புதமாக இருக்கும். கீழே சில முக்கிய டிப்ஸ்களோடு விளக்கம் கொடுத்துள்ளேன். நீங்களும் வீட்டிலேயே சுவையான தேன்குழலை செய்து பாருங்களேன். 




தேவையான பொருட்கள்
  • 2 கப் (500 கிராம்)   இட்லி அரிசி
  • 1/2 கப் உளுந்தம்பருப்பு மாவு
  • 1.5 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  • 1 டீஸ்பூன் கருப்பு எள்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 3/4 கப் தண்ணீர்
  • 750 மில்லி தேங்காய் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
செய்முறை
  1. ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசியை எடுத்துக் கொள்ளவும். அதில் 5 கப் தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 மணி நேரம் ஊறவத்துக் கொள்ளவும்.
  2. பின் 3 முறை தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். தண்ணீரை நன்கு வடிகெட்டி கொள்ளவும்.
  3. பின் கிரைண்டரில் ஊறவைத்த அரிசியை சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளவும். சிறிது தண்ணீர் ஊற்றி அரைக்கவும். இடை இடையே டிரமின்  ஓரங்களில் ஒட்டும் அரிசியை ஒதுக்கி அரைக்கும் அரிசியோடு சேர்க்கவும். தண்ணீரை கவனமாக சிறிது சிறிதாக சேர்க்கவும்.
  4. மாவு அரைக்கும் நேரத்தில் உளுந்தம்பருப்பு மாவை நன்றாக சலித்துக் கொள்ளவும்.
  5. மாவு நன்கு மையாக அரைந்ததும் மெதுவாக அரைத்த மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றவும். (சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் வரை அரைக்கவும்).
  6. அரைத்த அரிசி மாவோடு சலித்த உளுந்தம் மாவு, கருப்பு எள், வெண்ணெய், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும். தண்ணீர் ஏதும் சேர்க்க வேண்டாம்.
  7. ஒரு அகலமான வாணலியில் தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் வைத்து சூடாக்கவும். தேன்குழல் பிழியும் ஒழக்கில் சிறிது தேங்காய் எண்ணெயை தடவிக் கொள்ளவும்.
  8. பிசைந்த மாவில் ஒரு பெரிய உருண்டையை எடுத்து நீளமாக உருட்டிக் கொண்டு ஒழக்கில் வைத்து மூடிக்கொள்ளவும்.
  9. எண்ணெய் சூடானதும் தேன்குழலை ஒரு எண்ணெய் தடவிய கரண்டியில் பிழிந்து சூடான எண்ணெயில் போடவும். இதே முறையில் 6 முதல் 8 தேன்குழல் பிழிந்து மிதமான சூட்டில் பொரிக்கவும். லேசாக நிறம் மாறியதும் திருப்பிப் போட்டு நன்கு சத்தம் நிற்கும் வரை பொரித்து எடுக்கவும்.
  10. காற்று புகாத சில்வர் டப்பாவில் வைக்கவும். தேன்குழல் நன்கு ஆறியதும் மூடிவைக்கவும்.
குறிப்பு

உளுந்தம்பருப்பு மாவு செய்முறை
1 கப் அரிசிக்கு 1/4 கப் உளுந்தம்பருப்பை எடுத்துக் கொள்ளவும். வாணலியை 2 நிமிடங்கள் சூடாக்கவும். பின் உளுந்தம்பருப்பை சேர்த்து கைவிடாமல் நன்கு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். சில பருப்புகள் பொன்நிறமாக மாறும் போது அடுப்பை அனைத்து விடவும். அதன் சூட்டிலேயே ஆறவிடவும். பின் மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடித்துக் கொள்ளவும். பின் சிறிய கண் உடைய சல்லடையில் சலித்துக் கொள்ளவும். சலித்த மாவை மீண்டும் ஒரு முறை சலித்துக் கொள்ளவும்.

அரிசி அரைக்கும் முறை

இதற்கு உருட்டு இட்லி அரிசி நன்றாக இருக்கும். அரிசியை 3 மணி நேரம் ஊறவைக்கவும். அரைக்கும் போது தண்ணீர் அதிகம் விடாமல் நைசாக அரைக்கவும்.

மாவு பிசையும் முறை

அரிசி மாவு அரைத்த பின் உளுந்தம்பருப்பு மாவு சேர்த்தபின் மாவு பிசைவதற்கு பதமாக இருக்கும். தண்ணீர் ஏதும் சேர்க்க வேண்டாம். வெண்ணெய் சேர்ப்பதால் தேன்குழல் பொறு பொறுப்பாக இருக்கும். அதிக அளவு வெண்ணெய் சேர்க்க வேண்டாம். மாவில் உப்பு சேர்க்கும் போது கவனமாக சேர்க்கவும். உப்பு அதிகமாகிவிட்டால் பொறு பொறுப்பு குறைந்துவிடும்.
மாவு தண்ணீர் பதமாக இருந்தால் பிசைந்த மாவை ஒரு வெள்ளைத்துணியில் வைத்து 10 நிமிடங்கள் மூடிவைக்கவும். பின் பிழியும் ஒழக்கில் வைத்து பிழியவும்.

எண்ணெயில் பொரிக்கும் முறை

தேன்குழலை பொரிப்பற்கு எப்போதும் அகலமான வாணலியை உபயோகப்படுத்தவும். தேன்குழலை பிழிந்த பின் சிறிது நேரம் கழித்து மெதுவாக திருப்பிப் போடவும். பின் ஷ்ஷ்ஷ் என்ற சத்தம்  முழுவதும் நின்ற பின் எடுக்கவும்.
தேன்குழல் நன்கு ஆறியபின் சில்வர் டப்பாவில் வைத்து மூடிவைக்கவும். மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகளை வைத்து செய்து பாருங்கள். வீட்டில் அனைவரும் விரும்பி ருசிப்பார்கள். வீட்டிலேயே சுவையான தேன்குழல் தயார்.

Comments

Popular posts from this blog

திருநெல்வேலி கூட்டாஞ்சோறு - Tirunelveli Kootanchoru

கூட்டாஞ்சோறு - திருநெல்வேலியின் மிகவும் பிரபலமான மதிய உணவு. காய்கறிகள், பருப்பு, அரிசி மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சோறு. இதற்கு நாட்டு வாழைக்காய், வெள்ளை கத்திரிக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், மாங்காய் மற்றும் முருங்கைக்கீரை முக்கிய காய்கறிகளாகும். இந்த சோறு செய்து ஆறிய பின் இதில் இருக்கும் புளிப்பு மற்றும் காரம் சமமாக சேர்ந்து சுவையாக இருக்கும். இதற்கு கூழ் வத்தல் அல்லது அப்பளம் வைத்து பரிமாறவும் . தேவையான பொருட்கள் 2 கப் புழுங்கல் அரிசி 1/2 கப் துவரம்பருப்பு பெரிய எலுமிச்சை அளவு புளி 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 10 சின்ன வெங்காயம் 3 பச்சை மிளகாய் உப்பு தேவையான அளவு காய்கறிகள் 2 கேரட் 10 பீன்ஸ் 10 கொத்தவரங்காய் 2 முருங்கைக்காய் 7 கத்தரிக்காய் 1 வாழைக்காய் 1 உருளைக்கிழங்கு சிறிதளவு மாங்காய் துண்டுகள் 1 கப் முருங்கைக்கீரை இலைகள் அரைக்க 1 கப் தேங்காய் துருவல் 20 காய்ந்த மிளகாய் 15 சின்ன வெங்காயம் 10 பூண்டு பற்கள் 1 டேபிள்ஸ்பூன் சீரகம் தாளிக்க 1/2 கடுகு 1/2 டீஸ்பூன் உள

குடமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா - Capsicum Potato Masala

குடமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை வைத்து ஒரு திடீர் சைட் டிஷ். எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் அல்லது சப்பாத்தி, பூரிக்கு பரிமாறலாம். குடமிளகாயை அதிக நேரம் எண்ணெயில் வதக்கினால் அதன் நிறமும் சுவையும் மாறிவிடும். இதில் சாம்பார் பொடிக்கு பதிலாக சிறிது மிளகாய்த்தூள் அல்லது மிளகுத்தூள் சேர்த்து செய்யலாம். தேவையான பொருட்கள் 1 பச்சை குடைமிளகாய் 1 உருளைக்கிழங்கு 1/4 டீஸ்பூன் சீரகம் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் சாம்பார் பொடி 1 டேபிள் ஸ்பூன் புளிக்கரைசல் 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு செய்முறை குடைமிளகாய் மற்றும் உருளைக் கிழங்கை நீளமாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய கிழங்கை சேர்த்து வதக்கவும். அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். உருளைக்கிழங்கு நன்கு வதங்கியதும் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.  குடைமிளகாய் லேசாக வதங்கியதும் புளிக்கரைசல் மற்றும் சாம்பார்  பொடி சேர்த்து 2 நிமிடங்கள் கெட்டியானதும் கொத்த

உளுந்தம் பருப்பு சோறு - Black Urid Dal Rice (Ulundham Paruppu Sadham)

உளுந்தம்பருப்பு சோறு - கருப்பு உளுந்து, அரிசி, தேங்காய் துருவல் மற்றும் வெந்தயம் சேர்த்து ஒரு ஆரோக்கியமான சாதம். இந்த சாதத்தை எள்ளு துவையல் போட்டு பிசைந்து அவியல் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.  தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1கப் கருப்பு உளுந்தம் பருப்பு - 1/4 கப் மற்றும் ஒரு கை வெந்தயம் - 1 டீஸ்பூன் பூண்டு பற்கள் - 10 தேங்காய்த்துருவல் - 1/2 கப் தண்ணீர் - 3 கப் நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி அதில் வெந்தயத்தை சேர்த்து வறுக்கவும். வெந்தயம் லேசாக வெடிக்க ஆரம்பித்ததும் கருப்பு உளுந்தம் பருப்பை சேர்த்து நன்கு  வாசனை வரும் வரை வறுக்கவும்.  ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசியோடு வறுத்த பருப்பையும் சேர்த்து நன்கு கழுவி விட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். ஒரு பிரஷர் குக்கரில் ஊறவைத்த அரிசி, மேலும் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். பின் அதில் தேவையான அளவு உப்பு, தேங்காய் துருவல் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். குக்கரை மூடி வைத்து 3 விசில் வரும் வரை